நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு
இந்திய ரயில்வே, டிசம்பர் 26ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் கட்டணங்களை நீண்ட தூர பயணங்களுக்கு கட்டண உயர்வை அறிவித்துள்ளது;
215 கி.மீ.க்கு மேல் சாதாரண வகுப்புக்கு 1 பைசா/கி.மீ, மெயில்/எக்ஸ்பிரஸ் (AC மற்றும் AC அல்லாத) வகுப்புகளுக்கு 2 பைசா/கி.மீ. உயர்கிறது,
ஆனால் புறநகர் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு எந்த உயர்வும் இல்லை.
இந்த உயர்வு மூலம் ரயில்வே சுமார் ₹600 கோடி கூடுதல் வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.